Friday, March 14, 2008

தமிழ் திருநங்கைகள் நாங்கள்..

இந்த மார்ச் மாதம் மூன்றாம்தேதி வெளியான தி சண்டே இந்தியன் இதழில் மூன்றாவது குரல் என்ற தலைப்பில் சாதித்துக்கொண்டிருக்கும் திரு நங்கையர் பற்றி கவர் ஸ்டோரி எழுதியிருந்தார்கள் . ஆஷா பாரதி , ப்ரியா பாபு , ரோஸ் , அல்கா , லக்ஷ்யா , நர்த்தகி மற்றும் என்னுடைய பேட்டியும் வந்திருந்தது. லிவிங் ஸ்மைலின் கட்டுரை அருமை. அவளை விரைவில் சந்திப்பேன்.

எங்கள் பிரச்சனைகளை மிகவும் தெளிவாக பாரபட்சமின்றி எழுதியிருந்தனர் தோழர் பழனியப்பன் மற்றும் அவரின் குழுவினர். படித்து மகிழ்ந்தேன் . தமிழ்கத்தில் புரட்சிகரமான மாற்றங்கள் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும் பெறவேண்டிய உரிமைகள், ஆற்றவேண்டிய கடமைகள் நிறைய உள்ளன. எனது பாதை வேறு. நான் இளைஞர்கள், இளம் பெண்கள் மத்தியில் திருநங்கைகள் பற்றி உள்ள தவறான அபிப்ராயங்களை தகர்க்க நினைக்கிறேன். அதற்காக சில திட்டங்களை வகுத்துக்கொண்டிருக்கிறேன். அவற்றை ஒவ்வொன்றாக செயல்படுத்துவேன்.

3 comments:

சிவசுப்பிரமணியன் said...

தங்களுடைய திட்டங்கள் வெற்றி பெற பாராட்டுகள், வாழ்த்துகள்

cheena (சீனா) said...

திட்டங்கள் நிறைவேற நல்வாழ்த்துகள் கல்கி

tsekar said...

all the best my dear sister

tsekar