Saturday, March 15, 2008

ஷேக்ஸ்பியர் நாயகியாக நான்..


ஹாம்லெட் ஆங்கில நாடகத்தில் நடித்தது ஒரு இனிய அனுபவம் மட்டும் அல்ல. எனது கலை வாழ்வில் ஒரு அற்புத துவக்கம் என்பேன். முதல் மேடை அனுபவமே ஷேக்ஸ்பியர் அமைவது அதிர்ஷ்டம்தான். ஆரோவில் எனக்களித்த அற்புதங்களில் இந்த நடிப்பனுபவமும் ஒன்று. அதுவும் இரட்டை வேடம்.


ஆரோவில் நாடகக்குழுவின் இயக்குனர் ஜில் அமெரிக்க பெண்மணி. ஆரோவில் வாசியாக பதினைந்து வருடமாக இங்குதான் வசிக்கிறார். மேலே மஞ்சள் உடையில் இருப்பது அவர்தான். திறமையும், அனுபவமும் உள்ளவர். என்மீது மிகுந்த அன்பு கொண்டவர். அவரிடன் நாடகத்துறை குறித்து நிறைய கற்றுக்கொண்டேன். திருநங்கைகள் பற்றிய தயக்கம் நமது ஊரில் மட்டும் இல்லை, வெள்ளைகாரர்களிடமும் உண்டு. எங்கள் குழுவில் முதலில் சிலரிடம் அந்த தயக்கம் இருந்தது. சில நாட்களிலேயே என்னுடன் பழகியதும் அந்த தயக்கம் நீங்கியது.

ஆறு மாதங்கள் ஒத்திகை பார்த்தோம். ஜனவரியில் மேடை ஏற்றம். அனைவரும் சிறப்பாக செய்தோம். ஆரோவில் சர்வதேச நகரம் என்பதால் இந்த நாடகத்தில் நடித்த அனைவருமே பல நாடுகளைசேர்ந்தவர்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ரஷ்யா நாடுகளை சேர்ந்த ஆரோவில்வாசிகள் என் சக நடிகர்கள்.
அடுத்து சிகன்டியின் கதை. இரண்டு வருடம் கழித்து அதை நான் செய்யக்கூடும்.

1 comment:

சிவசுப்பிரமணியன் said...

தங்களுடைய கலையார்வத்திற்கும், முயற்சிகலுக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள்