Friday, December 12, 2008

தமிழக அரவானிகளின் உண்ணாநிலை ஒப்பாரி போராட்டம் - ஒரு வரலாற்று சம்பவம்..






இலங்கையில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் போரில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்படும் அவலம் எங்கள் திருநங்கையர்களை கவலைகொள்ள வைத்திருக்கிறது. ஏராளமான பெண்களும், குழந்தைகளும் கொல்லப்படுகிறார்கள் என்பதை நினைக்கும்போது இதயத்தை பிடுங்குவதுபோல் ஒரு உணர்வு. போரின் கொடுமைகளை செவிவழியாக கேட்கும்போதே மனம் நடுங்குகிறது, வலிக்கிறது.

இதுவரை எங்களுடைய அடிப்படை உரிமைகள், தேவைகளுக்காக குரல் கொடுத்துக்கொண்டிருந்த நாங்கள் முதன்முறையாக ஒரு மிகப்பெரிய போராட்டமாக கடந்த பலவருடங்களாக இருந்துகொண்டிருக்கும் நமது தமிழீழ சகோதர சகோதரிகளுக்காக ஒரு உண்ணாநிலை ஒப்பாரி போராட்டம் ஒன்று சென்னையில் கடந்த டிசம்பர் 8 ந்தேதி நானும் எனது திருநங்கை சகோதரி பிரியா பாபுவும் இணைந்து நடத்தினோம்.

போரை நிறுத்த வலியுறுத்துவதுதான் எங்கள் போராட்டத்தின் முக்கிய நோக்கம். நாங்கள் உண்ணாநிலையில் இருந்தால்மட்டும் போர்நின்று விடாது என்பதை நாங்கள் நன்றாகவே அறிவோம். ஆனால் அரவானிகள் இத்தகைய ஒரு போராட்டம் செய்யும்போது ஒரு சின்ன அதிர்வாவது ஏற்படும் அல்லவா? அதற்காகத்தான்.

மேலும் தமிழர்களின் முக்கிய பிரச்சனை இது. ஈழ போராட்டத்தை, தமிழர் படும் பாட்டை நன்றாக நன்றாக அறிந்துவைத்துள்ளோம். எங்களுக்கு அதன் கவலை உண்டு. அதற்கான அரவானிகளின் பதிவு மிக தேவை . அதை நன்றாகவே பதிவு செய்தோம் நாங்கள். எங்களின் இந்த உண்ணாநிலை போராட்டத்திற்கு கனிமொழி அவர்களும், திரு. ஜெகத் கஸ்பர் அவர்களும் மிக உதவினார்கள். அவர்களுக்கு எங்கள் நன்றிகள். திருநங்கைகள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர்கள்.

ஈழத்தமிழர்களை நாங்கள் ஆதரிக்கிறோம். போரை எதிர்க்கிறோம். எங்கெல்லாம் தமிழினம் உள்ளதோ அங்கெல்லாம் அமைதி தழைக்க வேண்டும்.

3 comments:

ரவி said...

வணக்கம் கல்கி...!!!

தொடர்ந்து எழுதுங்க...

தமிழ்மணம் தமிழ்ஷ் போன்ற திரட்டிகளில் பதிவை இணைக்க முயற்சி செய்யுங்கள்...

சிவசுப்பிரமணியன் said...

தங்கள் போராட்டத்திற்கு ஏற்கனவெ வாழ்த்து கூறியிருந்தாலும்.. நன்றி சொல்லும் கடமையும் எனக்கிருக்கிறது.. மிக்க நன்றி தோழி

Naveen Krishna said...

Recently only I've seen your
blog & diary.

Really to me your work is heart touching
Kalki. Continue your work for the
noble cause you have taken.

Also, your love for humanity and it's
well being greatly moved me.

Please kindly inform me about any
functions or activities you are conducting and undertaking.

At most possible circumstance, I also can able to do something helpful things
to You and to your noble cause.

Wishes
Naveen Krishna