Friday, December 26, 2008
தமிழ் திரைப்பட இயக்குநர்களுக்கு ஒரு கோரிக்கை..
Friday, December 12, 2008
தமிழக அரவானிகளின் உண்ணாநிலை ஒப்பாரி போராட்டம் - ஒரு வரலாற்று சம்பவம்..
இலங்கையில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் போரில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்படும் அவலம் எங்கள் திருநங்கையர்களை கவலைகொள்ள வைத்திருக்கிறது. ஏராளமான பெண்களும், குழந்தைகளும் கொல்லப்படுகிறார்கள் என்பதை நினைக்கும்போது இதயத்தை பிடுங்குவதுபோல் ஒரு உணர்வு. போரின் கொடுமைகளை செவிவழியாக கேட்கும்போதே மனம் நடுங்குகிறது, வலிக்கிறது.
இதுவரை எங்களுடைய அடிப்படை உரிமைகள், தேவைகளுக்காக குரல் கொடுத்துக்கொண்டிருந்த நாங்கள் முதன்முறையாக ஒரு மிகப்பெரிய போராட்டமாக கடந்த பலவருடங்களாக இருந்துகொண்டிருக்கும் நமது தமிழீழ சகோதர சகோதரிகளுக்காக ஒரு உண்ணாநிலை ஒப்பாரி போராட்டம் ஒன்று சென்னையில் கடந்த டிசம்பர் 8 ந்தேதி நானும் எனது திருநங்கை சகோதரி பிரியா பாபுவும் இணைந்து நடத்தினோம்.
போரை நிறுத்த வலியுறுத்துவதுதான் எங்கள் போராட்டத்தின் முக்கிய நோக்கம். நாங்கள் உண்ணாநிலையில் இருந்தால்மட்டும் போர்நின்று விடாது என்பதை நாங்கள் நன்றாகவே அறிவோம். ஆனால் அரவானிகள் இத்தகைய ஒரு போராட்டம் செய்யும்போது ஒரு சின்ன அதிர்வாவது ஏற்படும் அல்லவா? அதற்காகத்தான்.
மேலும் தமிழர்களின் முக்கிய பிரச்சனை இது. ஈழ போராட்டத்தை, தமிழர் படும் பாட்டை நன்றாக நன்றாக அறிந்துவைத்துள்ளோம். எங்களுக்கு அதன் கவலை உண்டு. அதற்கான அரவானிகளின் பதிவு மிக தேவை . அதை நன்றாகவே பதிவு செய்தோம் நாங்கள். எங்களின் இந்த உண்ணாநிலை போராட்டத்திற்கு கனிமொழி அவர்களும், திரு. ஜெகத் கஸ்பர் அவர்களும் மிக உதவினார்கள். அவர்களுக்கு எங்கள் நன்றிகள். திருநங்கைகள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர்கள்.
ஈழத்தமிழர்களை நாங்கள் ஆதரிக்கிறோம். போரை எதிர்க்கிறோம். எங்கெல்லாம் தமிழினம் உள்ளதோ அங்கெல்லாம் அமைதி தழைக்க வேண்டும்.
Wednesday, October 08, 2008
திருநங்கைகளுக்கு இலவச கல்வி வேண்டும்..
ஒவ்வொரு கடையிலும் ஆள் மாற்றி ஆள் என குறைந்தது மூன்று திருநங்கைகள் பிச்சை கேட்டு ஒரு நாளில் வருகின்றனர். சில சமயங்களில் கூட்டாக நான்கைந்து பேரும் வருவதுண்டு. கடைக்காரர்கள் பெரும்பாலானவர்கள் மனமுவந்து கொடுப்பதில்லை. என் இவர்கள் பிச்சை எடுக்கின்றனர்? வீட்டு வேலை செய்யலாம்? எத்தனையோ வேலை இருக்கின்றதே என்று பலர் கேட்கின்றனர். அப்படிக்கேட்பவர்களிடம் நான் ஒன்றுதான் கேட்பேன். உங்கள் வீட்டில் வேலைக்காரியாகவாவது ஒரு திருநங்கையை ஏற்றுக்கொள்வீர்களா?
இந்த சமூகம் திருநங்கைகளை ஏற்றுக்கொள்ள இன்னும் தயங்கிகொண்டுதான் இருக்கிறது. வீட்டு வேலைக்காரியாகக்கூட ஏற்றுக்கொள்ளத்தயங்குகின்றனர். எனவேதான் பிச்சை எடுப்பதும் பாலியல் தொழில் செய்வது மட்டுமே திருநங்கைகளால் இயல்கிறது. திருநங்கைகளுக்கு கல்வி முக்கியம். அரசும் அரசு சாரா தனியார் கல்வி நிறுவனங்களும் திருநங்கைகளுக்கு இலவசக்கல்வி வசதியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். கல்வி ஒன்றுதான் அவர்கள் வாழ்வை உயர்த்தும்.
Thursday, September 25, 2008
திருநங்கையர் வாழ்வு மலர அரசு என்ன செய்ய வேண்டும்?
Wednesday, September 10, 2008
என் நடனம்.. என் வாழ்க்கை..
Sunday, August 24, 2008
சென்னையில் ஒரு வீடு ...
சென்னைக்கு வந்தபின் என் அலுவலகம் இருக்கும் சைதாபேட்டை பகுதியில் இரண்டு நாட்களாக ரோஸின் ஸ்கூட்டி பெப்பில்அலைந்துகூட வீடு கிடைக்கவில்லை. ஒரு வீட்டில் திருநங்கை என்று தெரிந்ததாலேயே வீடு மறுக்கப்பட்டேன். மனம் வெதும்பி இருந்தவேளையில் ரோஸ் ஆறுதல் சொன்னதுமட்டுமல்லாமல் என்னை உற்சாகப்படுத்தினாள்.
கடைசியாக நேற்று மாலையில் ஒரு இரண்டுமாடி கட்டிட வீட்டில் மொட்டைமாடியில் ஒரு சிறிய வீடு கிடைத்தே விட்டது. கல்கி திரைப்படத்தில் கல்கி தங்கியிருப்பாளே அதுபோல ஒரு வீடுதான்.
வீட்டு உரிமையாளரிடம் நான் திருநங்கை என்று சொல்லவில்லை. அந்த அவசியமும் ஏற்படவில்லை. பின்னொருநாள் அவர்களே கண்டுகொள்வார்கள். அப்போது பார்க்கலாம். அதன்பிறகு பிரியாபாபுவை சந்தித்துவிட்டு ஆட்டோவில் என் அலுவலத்திற்கு வருவதற்குள் அந்த ஆட்டோவை ஓட்டிவந்த இரண்டு பேரில் ஒருவன் கையை நீட்டி என் காலை வருடுவதும் என்னை தடவ முயற்சிப்பதுமாக இருந்தது என்னை அதிர்ச்சியடைய வைத்தது. சட்டென்று என் அலுவலகம் வர இறங்கிக்கொண்டேன். சண்டை போட்டிருக்கலாம். ஆனால் நான் சண்டைபோடவில்லை. மிகப்பெரிய மாற்றங்களுக்கு விதைபோடும் சமயத்தில் இந்தமாதிரி மனிதர்களிடம் என் சக்தியை சிதறடிக்க விரும்பவில்லை.
Friday, August 08, 2008
இனி சென்னைவாசி நான் ..
சென்னையில் நல்ல வீடு கிடைப்பது மிகவும் அரிது என்று எனக்குத்தெரியும். திருநங்கைகளுக்கு மிகமிக அரிது எனவும் எனக்குத்தெரியும். நான் அதிர்ஷ்டக்காரி. சென்னையில் எனக்கு தோழிகள் நல்ல நண்பர்கள் அதிகம். நான் கொடுத்து வைத்தவள். இரண்டே நாட்களில் எனக்கென்று வீடு அமையும்.
Saturday, July 12, 2008
தமிழ் செல்வந்தர்களுக்கு ஒரு கோரிக்கை...
இந்தியாவிலேயே முதன்முறையாக திருநங்கைகளுக்காக தொடங்கப்பட்டு
நிதிஉதவி ஏதும் இல்லாததால் நின்று போன எனது 'சகோதரி' பத்திரிக்கையை மீண்டும் தொடரவேண்டும்.
திருநங்கைகளின் வாழ்வாதார பிரச்சினைகள், தீர்வுகள், அவர்தம் படைப்புக்களையும் தாங்கிவந்த இந்த சிற்றிதழ் நின்றுபோனது என்னை மிகவும் கவலைக்குள்ளாக்கியது. 'சகோதரி' மீண்டும் உயிர்பெற வேண்டும்.
Sunday, June 29, 2008
பொம்மைகளுடன் விளையாடுவேன் !
Sunday, May 18, 2008
தமிழக அரசுக்கு நன்றி.... இப்போதைக்கு..
இதில் பிரியாபாபு, ஆஷாபாரதி போன்றவர்களின் அரும்பணி குறிப்பிடத்தக்கது. இருவரும் சட்டத்தோடு போராடியிருக்கிறார்கள். மேலும் பலர் முக்கியப்பணி ஆற்றியிருக்கிறார்கள். இன்னும் திருநங்கைகளின் உரிமைக்கான போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
ஆனால் ரோஸ் மற்றும் என்னுடைய வழிகள் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். சாதனைகள்தான் வெற்றிகளையும் மாற்றங்களையும் மகுடங்களாக சூட்டும் என்பதை இருவரும் அறிவோம். அதற்காக உழைக்கிறோம். மாற்றங்களை மக்கள் மனதில் உருவாக்குகிறோம்.
தமிழக அரசுக்கு நன்றி.... இப்போதைக்கு..
Thursday, April 24, 2008
புலிகள்... பிரபாகரன்....
தமிழீழ விடுதலை பற்றி எழுதவேண்டும் என்று வெகுநாட்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். தமிழர்கள் அங்கே கொல்லப்படும்போது இங்கேஅமர்ந்து யாகூவில் அரட்டை அடிக்கும் யுவதிகளில் நானும் ஒருத்தி என்று வெட்கத்துடன் கூறிக்கொள்கிறேன். பள்ளிப்பருவத்தில் பிரபாகரனின் புகைப்படத்தை முதன்முதலில் பார்த்தபோது அவர் கன்னத்தில் முத்தம் கொடுத்து ஒரு சல்யூட் அடிக்க ஆசைப்பட்டிருக்கிறேன். எனக்கு தெரிந்த ஒரே வீரத்தமிழன் அப்போது அவர்தான். தீவிரவாதத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. துப்பாக்கி விடுதலை தரும் என்று என்றும் நான் நம்பியதில்லை. அமைதிப்பேச்சுவார்த்தை ஒன்றே தீர்வு தரும் என்பது எனது கருத்து. எத்தனை ரத்தங்கள, எத்தனை படுகொலைகள்... ஈழத்தில் பெண்களும், குழந்தைகளும் கற்பழிக்கப்பட்டு கொலைசெய்யப்படும் நிகழ்வுகள் கற்பனைக்கெட்டாத சோகங்கள்.
Thursday, April 17, 2008
ரோஸ் கல்கி நட்பு..
ரோஸ் விஜய் டிவியில் 'இப்படிக்கு ரோஸ்' என்ற நிகழ்ச்சியை வழ்ங்குகிறாள். சென்ற வாரம் ஒரு முக்கிய திருநங்கைகள் சந்திப்பில் ரோசும் நானும் சந்தித்தோம். திருநங்கைகளின் வாழ்வில் பெரிய மாற்றங்கள் கொண்டுவருவதற்கான சந்திப்பு. பல முக்கிய விஷயங்களை பற்றி விவாதித்தோம். சந்தித்த நிமிடம் முதல் இரண்டு நாட்கள் பிரியவில்லை. பீச், ஷாப்பிங், சும்மா பெப் வண்டியில் ஊர் சுற்றுவது என்று மிக மிக ரசித்தோம் ஒவ்வொரு நிமிடமும்.
இரவுகளில் பெண்கள் சென்னையில் தனியாக பயணிக்க முடியாது என்று அப்போதுதான் அறிந்துகொண்டேன். இரண்டு சக்கர வண்டியில் எங்களால் தனியாக போகமுடியவில்லை. ஆண்களின் கிண்டலும், அழைப்புகளும் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்றால் ரோஸ் மிகவும் கோபப்பட்டாள். ஒரு இடத்தில் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு ஆள் எங்களை வெகுதூரம் தொடர்ந்துவந்தது மிகுந்த வேதனையை உண்டாகியது. ரோஸ் அந்த ஆளை அடிக்காத குறைதான். இருவரும் கண்டித்து அனுப்பினோம். . ஆண்கள் இத்தனை வெறியோடு அலைகிறார்கள் என்று நினைக்கும்போது பயமாகத்தான் இருக்கிறது.
Saturday, March 29, 2008
உறவுகள் முறிவுகள் பிரிவுகள்..
என் கடமைகளில் முதன்மை
Monday, March 24, 2008
அனுதாபமும், பரிதாபமும் அவர்களிடமே இருக்கட்டும்..
துன்பப்படும் நங்கைகளுக்கு உதவவேண்டும். ஆனால் இரப்பவர்க்கு அல்ல. வணிகத்தலங்களில் கைதட்டி பிச்சை எடுப்பவர்களின்மேல் எனக்கு கோபம் உண்டு. பலர் பயந்துதான் பணம் கொடுக்கிறார்கள். அவர்களின் அந்த பயமே வெறுப்பாக மாறுவதையும் பார்த்திருக்கிறேன். வேதனைப்பட்டிருக்கிறேன். ஆனால் பிச்சை எடுக்கும் நங்கைகள் சொல்லும் காரணமும் சரியானதுதான். சமூகம் வேலை அளிப்பதில்லை. தள்ளிவைத்து பயத்துடன்தான் பார்க்கிறது. மாற்றங்கள் சமூகத்தில்தான் முதலில் தேவை. பிறகுதான் திருநங்கைகளிடம்.
படித்தவர்களின் கடமைகள் நிறைய உண்டு. எங்களில் படித்தவர்களை பற்றித்தான் சொல்கிறேன். நாங்கள் நல்ல ரோல் மாடல்கள் ஆனால்தான் மாற்றங்கள் பலப்படும்.
எது பெண்மை?
Saturday, March 15, 2008
ஷேக்ஸ்பியர் நாயகியாக நான்..
ஹாம்லெட் ஆங்கில நாடகத்தில் நடித்தது ஒரு இனிய அனுபவம் மட்டும் அல்ல. எனது கலை வாழ்வில் ஒரு அற்புத துவக்கம் என்பேன். முதல் மேடை அனுபவமே ஷேக்ஸ்பியர் அமைவது அதிர்ஷ்டம்தான். ஆரோவில் எனக்களித்த அற்புதங்களில் இந்த நடிப்பனுபவமும் ஒன்று. அதுவும் இரட்டை வேடம்.
Friday, March 14, 2008
தமிழ் திருநங்கைகள் நாங்கள்..
எங்கள் பிரச்சனைகளை மிகவும் தெளிவாக பாரபட்சமின்றி எழுதியிருந்தனர் தோழர் பழனியப்பன் மற்றும் அவரின் குழுவினர். படித்து மகிழ்ந்தேன் . தமிழ்கத்தில் புரட்சிகரமான மாற்றங்கள் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும் பெறவேண்டிய உரிமைகள், ஆற்றவேண்டிய கடமைகள் நிறைய உள்ளன. எனது பாதை வேறு. நான் இளைஞர்கள், இளம் பெண்கள் மத்தியில் திருநங்கைகள் பற்றி உள்ள தவறான அபிப்ராயங்களை தகர்க்க நினைக்கிறேன். அதற்காக சில திட்டங்களை வகுத்துக்கொண்டிருக்கிறேன். அவற்றை ஒவ்வொன்றாக செயல்படுத்துவேன்.
Thursday, March 13, 2008
சகோதரியின் வணக்கம் !
ஆனால் அவற்றையும் தாண்டி லட்சியச்சுடரோடு இங்கு வந்திருக்கிறேன். மீண்டும் நாளை சந்திக்கிறேன்.
-கல்கி-
-
விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள திருநங்கைகளின் வாழ்வியலை ரௌத்திரமாகச்சொல்லும் எனது கவிதை நூலான 'குறி அறுத்தேன்' கவிதை நூலிலிருந்த...
-
தமிழ் திரைப்பட இயக்குநர்களுக்கு கல்கியின் கோரிக்கை என்னவென்றால்....