Sunday, May 18, 2008

தமிழக அரசுக்கு நன்றி.... இப்போதைக்கு..

'திருநங்கை' என்ற மூன்றாம் பாலின பிரிவை சேர்த்துக்கொள்ள ஆணை பிறப்பித்த தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றிகள். பல ஆண்டுகளாக திருநங்கைகளின் வாழ்வுரிமைக்கான போராட்டம் என்பது பல அவமானங்கள், புறக்கணிப்புக்கள், ஏமாற்றங்களை தாண்டியும், தாங்கியும்தான் நடந்துவருகிறது.

இதில் பிரியாபாபு, ஆஷாபாரதி போன்றவர்களின் அரும்பணி குறிப்பிடத்தக்கது. இருவரும் சட்டத்தோடு போராடியிருக்கிறார்கள். மேலும் பலர் முக்கியப்பணி ஆற்றியிருக்கிறார்கள். இன்னும் திருநங்கைகளின் உரிமைக்கான போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

ஆனால் ரோஸ் மற்றும் என்னுடைய வழிகள் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். சாதனைகள்தான் வெற்றிகளையும் மாற்றங்களையும் மகுடங்களாக சூட்டும் என்பதை இருவரும் அறிவோம். அதற்காக உழைக்கிறோம். மாற்றங்களை மக்கள் மனதில் உருவாக்குகிறோம்.

தமிழக அரசுக்கு நன்றி.... இப்போதைக்கு..