Saturday, March 29, 2008
உறவுகள் முறிவுகள் பிரிவுகள்..
நட்பு. ஒரு தெய்வீகமான உணர்வு. நட்பில் விளையும் நேசம் ஒரு அற்புதம் அல்லவா? அதற்கு ஈடு இணை எது? என் நண்பர்கள் என் உயிரில் கலந்தவர்கள். ஆனால் நான் என்னை நானாக மாற்றிக்கொண்ட பிறகு நான் மிகவும் நேசித்த சிலர் என்னை விட்டு விலக ஆரம்பித்தனர். என் இதயத்தில் அவர்கள் வாளைச்சொருகிய் நிகழ்வுகள் உண்டு. வலிகள் தரககூடிய அந்த நினைவுகள் சில சமயங்களில் என்னை தின்னதொட்ங்கும்.
என் கடமைகளில் முதன்மை
எனது கடமைகள் எங்கே என்பதை நான் தெளிவாக அறிந்துள்ளேன் திருநங்கைகள் மற்றும் பாலினத்தால் மாறுபட்டவர்கள் பற்றிய விழிப்புணர்வு இளைஞர்கள் மத்தியில் ஏற்படுவது மிக மிக அவசியம். ஏனெனில் நாளைய தலைவர்கள் அவர்கள்தான். இந்த நாட்டின் சட்டம், அரசியல், கொள்கைகள் இவற்றை நிர்ணயிக்கப்போவது அவர்கள்தான். அவர்கள் நெஞ்சங்களில் உள்ள அறியாமை என்ற நஞ்சை அகற்றி உண்மை என்ற மருந்தை புகட்டுவது என் கடமை. இதில் சவால்கள், அவமானங்கள், இனிய அனுபவங்கள் எல்லாமே நேரக்கூடும் என்பதை நான் நன்றாகவே அறிந்துள்ளேன்.
கல்லூரிகள், பல்கலைகழகங்களுக்கு செல்கிறேன். மேலும் பல கருத்தரங்கங்களுக்கும் செல்வேன். எழுத்துக்களை வாசிக்கும் இளைஞர்கள் எத்தனைபேர் என்று தெரியவில்லை. எனவே நேருக்கு நேர் சந்திப்புகளும், உரையாடல்களும், செமினார்களுமே ஆரம்பத்தில் மாற்றங்களின் அசைவுக்கு உதவும். குறிப்பாக சமூகவியல், சமூகசேவை பற்றிய பாடங்கள் படிக்கும் மாணவர்களுக்கு இந்த விழிப்புணர்வு மிகவும் தேவை.
Subscribe to:
Posts (Atom)
-
விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள திருநங்கைகளின் வாழ்வியலை ரௌத்திரமாகச்சொல்லும் எனது கவிதை நூலான 'குறி அறுத்தேன்' கவிதை நூலிலிருந்த...
-
தமிழ் திரைப்பட இயக்குநர்களுக்கு கல்கியின் கோரிக்கை என்னவென்றால்....