Friday, August 08, 2008

இனி சென்னைவாசி நான் ..

இந்த மாதம் மூன்றாவது வார இறுதியில் சென்னைக்கு குடி பெயர்ந்துவிடுவேன். என் சொந்த ஊர் பொள்ளாச்சி - நகரமும் கிராமமும் இணைந்த ஒரு கலவை. என் ஊர் அழகின் இலக்கணம் . இந்த ஊரிலிருந்து அங்கு செல்ல எனக்கு சற்றே சற்று தயக்கம் இருந்தாலும் இந்த மாற்றம் அற்புதங்கள் நிகழ்த்தும்.

சென்னையில் நல்ல வீடு கிடைப்பது மிகவும் அரிது என்று எனக்குத்தெரியும். திருநங்கைகளுக்கு மிகமிக அரிது எனவும் எனக்குத்தெரியும். நான் அதிர்ஷ்டக்காரி. சென்னையில் எனக்கு தோழிகள் நல்ல நண்பர்கள் அதிகம். நான் கொடுத்து வைத்தவள். இரண்டே நாட்களில் எனக்கென்று வீடு அமையும்.