புன்னகை என்ற இந்த மூன்று நிமிட படம் திருநங்கைகளின் வாழ்வில் மகிழ்ச்சியான சில நொடிகளின் பதிவு. திருநங்கை கல்கியால் உருவாக்கப்பட்ட ஒரு அழகிய குட்டிப்படம்.
திருநங்கைகளுக்கு அர்ப்பணம்.
Friday, July 24, 2009
Sunday, July 19, 2009
நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்
- திருநங்கைகளின் நலனில் அக்கறைகொண்டு எங்களின் சமூகமேம்பாட்டுக்காக நலவாரியம் அமைத்த தமிழக அரசுக்கும், மாண்புமிகு தமிழக முதல்வருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள். நூற்றாண்டுகளாக மிகவும் பின்தங்கிய நிலையில் சமூகத்தின் அனைத்து நிலைகளினும் புறக்கணிக்கப்பட்டு அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்பட்டு வந்த ஒரு சமூகத்திற்காக நலவாரியம் அமைத்ததன் மூலம் தமிழக அரசு இந்தியாவின் பிறமாநிலங்களுக்கும், உலக நாடுகளுக்கும் ஒரு பெருமைமிகு முன்னோடியாக திகழ்கிறது.
- இருசாரர் பயிலும் அரசு கல்லூரிகளில் விண்ணப்பங்களில் மூன்றாம்பாலின சேர்ப்பு, திருநங்கைகள் ஒவ்வொருவருக்கும் உணவுவிநியோக அட்டை, திருநங்கைகளுக்கு இலவச பால்மாற்று மருத்துவ அறுவை சிகிச்சை, இவ்வாண்டின் மாநில நிதி அறிக்கையில் திருநங்கைகளுக்கு 1 கோடிக்கு தொகுப்புவீடுகள் ஒதுக்கீடு என்று தொடர்ந்து திருநங்கைகள் நலனில் அக்கறைகொண்டு நடவடிக்கை எடுத்துவரும் தமிழக அரசுக்கும், மாண்புமிகு தமிழக முதல்வருக்கும் தமிழகத்தின் அனைத்து திருநங்கைகள் சார்பாக மகிழ்ச்சியினையும், பாராட்டுக்களையும், நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
- தமிழக திருநங்கைகள் மட்டுமின்றி இந்தியாவிலுள்ள அனைத்து மூன்றாம்பாலின மக்களுக்காகவும் பாராளுமன்றத்தில் குரல்கொடுத்து எமது உரிமைபோராட்டத்திற்கு தோள் கொடுத்துவரும் அன்பிற்குரிய பாராளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி அவர்களுக்கு அனைத்து திருநங்கைகள் சார்பாக சகோதரி பவுண்டேஷன் மூலம் எமது உளமார்ந்த நன்றியினை தெரிவித்துகொள்கிறோம்.
அன்புடன்,
கல்கி
இயக்குநர்/நிறுவனர்
சகோதரி பவுண்டேஷன்
(திருநங்கைகள் சமூக, பொருளாதார மேம்பாட்டு தொண்டு நிறுவனம்)
மேற்கு சைதாப்பேட்டை,
சென்னை - 600 015
மின்னஞ்சல்: aurokalki@gmail.com
இணையதள்ம்: www.sahodari.org
Friday, May 15, 2009
‘திருநங்கைகள் மதிப்புக்குரியவர்கள்’ - ‘சகோதரி’யின் கடற்கரை நிகழ்வு
திருநங்கைகள் குறித்து ஏராளமான சந்தேகங்களும், தவறான புரிதல்களும் பொதுவெளிச்சமூகத்தில் உள்ளன. அவ்வப்போது ஊடகங்கள் சில தவறான செய்திகளை வெளியிடுகின்றன. இந்த முரண்பட்ட செய்திகளால் மக்கள் திருநங்கைகளின்பால் சந்தேகம் கொள்ள வாய்ப்பிருக்கிறது. திருநங்கைகளின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக செய்லாற்றிவரும் ‘சகோதரி’, பொதுமக்களில் கடைக்கோடியினர்கூட சரியாக திருநங்கைகளை புரிந்துகொள்ளவேண்டும் என்ற லட்சியம் கொண்டுள்ளது.
19-04-2009 அன்று மாலை சென்னை மெரினா கடற்கரை காந்திசிலை அருகே ‘திருநங்கைகள் மதிப்புக்குரியவர்கள்’ என்ற தலைப்பில் ஒரு வீதி நிகழ்வை பொதுவெளி அரங்கில் நிகழ்த்தியது ‘சகோதரி’.
‘அடையாளம்’ என்ற வீதி நாடகம், வலி என்ற தலைப்பில் ஒரு கவிதை வாசிப்பு நிகழ்ச்சி மற்றும் ‘திருநங்கைகளை மதிப்போம்! இணையாக நடத்துவோம்!’ என்ற வாசகங்களின் கீழே ஏராளமான பொதுமக்கள் கையெழுத்திடும் நிகழ்வும் நடந்தது. ‘அடையாளம்’ நாடகத்தில் நண்பர் ஸ்ரீஜித்தும் நானும் இணைந்து இயக்கி நடித்தோம்.
கவிதை வாசிப்பு நிகழ்வில் பல இளம் கவிஞர்கள் வந்திருந்து திருநங்கைகள் குறித்து தங்களுடைய கவிதைகளை வாசித்தனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அதிக அளவில் திருநங்கைகள் வந்திருந்தனர். அவர்களின் பங்களிப்பு இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு பெரும் காரணமாக இருந்தது. தோழிகள் மோனல், சந்தியா, ஆல்கா மற்றும் உபாசனா ஆகியோர் மிகவும் உதவினார்கள். காவல்துறையினரின் ஒத்துழைப்பும், பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நண்பர்களின் ஆதரவும் இந்நிகழ்ச்சிக்கு பெரும் வலு சேர்த்தது. பொதுமக்கள் மிகவும் ஈர்ப்புடன் அமைதியான முறையில் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
‘அடையாளம்’ நாடகம் ஓரிரவில் என்னால் இயற்றப்பட்டது. சமூகத்தில் திருநங்கைகள் அனுபவிக்கின்ற அவலங்களை துல்லியமாக விளக்கும் ஒரு முயற்சியாக இந்நாடகத்தை உருவாக்கினேன்.. அவர்கள் பிச்சை எடுப்பதும், பாலியல் தொழில் செய்வதும் எதனால் என்பது குறித்தும், பொது இடங்களில் அவர்களின் செயல்பாடுகள் ஏன் ஏற்றுக்கொள்ளப்படுபவையாக இருப்பதில்லை என்பதுபற்றியும் சரியான விளக்கங்கள் இந்நாடகத்தின்மூலம் தெரியப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியை மக்கள் தொலைக்காட்சி முழுவதுமாக பதிவு செய்தது. ஒருவாரம் கழித்து இந்நிகழ்வு இருமுறை ஒளிபரப்பப்பட்டது என்று அறிந்தேன். மக்கள் தொலைக்காட்சிக்கு எனது நன்றிகள். தினகரன், டைம்ஸ் ஆப் இண்டியா ஆகிய நாளிதழ்கள் படச்செய்தியாக இந்நிகழ்வை வெளியிட்டன. நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் இதழ் புகைப்படங்களுடன் சிறப்புக்கட்டுரை வெளியிட்டிருந்தது. கடற்கரையில் நடந்த திருநங்கைகளின் இந்த எளிய நிகழ்வு ஒரு முக்கியப்பதிவாகும்.
இதோ சில புகைப்படங்கள் :
19-04-2009 அன்று மாலை சென்னை மெரினா கடற்கரை காந்திசிலை அருகே ‘திருநங்கைகள் மதிப்புக்குரியவர்கள்’ என்ற தலைப்பில் ஒரு வீதி நிகழ்வை பொதுவெளி அரங்கில் நிகழ்த்தியது ‘சகோதரி’.
‘அடையாளம்’ என்ற வீதி நாடகம், வலி என்ற தலைப்பில் ஒரு கவிதை வாசிப்பு நிகழ்ச்சி மற்றும் ‘திருநங்கைகளை மதிப்போம்! இணையாக நடத்துவோம்!’ என்ற வாசகங்களின் கீழே ஏராளமான பொதுமக்கள் கையெழுத்திடும் நிகழ்வும் நடந்தது. ‘அடையாளம்’ நாடகத்தில் நண்பர் ஸ்ரீஜித்தும் நானும் இணைந்து இயக்கி நடித்தோம்.
கவிதை வாசிப்பு நிகழ்வில் பல இளம் கவிஞர்கள் வந்திருந்து திருநங்கைகள் குறித்து தங்களுடைய கவிதைகளை வாசித்தனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அதிக அளவில் திருநங்கைகள் வந்திருந்தனர். அவர்களின் பங்களிப்பு இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு பெரும் காரணமாக இருந்தது. தோழிகள் மோனல், சந்தியா, ஆல்கா மற்றும் உபாசனா ஆகியோர் மிகவும் உதவினார்கள். காவல்துறையினரின் ஒத்துழைப்பும், பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நண்பர்களின் ஆதரவும் இந்நிகழ்ச்சிக்கு பெரும் வலு சேர்த்தது. பொதுமக்கள் மிகவும் ஈர்ப்புடன் அமைதியான முறையில் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
‘அடையாளம்’ நாடகம் ஓரிரவில் என்னால் இயற்றப்பட்டது. சமூகத்தில் திருநங்கைகள் அனுபவிக்கின்ற அவலங்களை துல்லியமாக விளக்கும் ஒரு முயற்சியாக இந்நாடகத்தை உருவாக்கினேன்.. அவர்கள் பிச்சை எடுப்பதும், பாலியல் தொழில் செய்வதும் எதனால் என்பது குறித்தும், பொது இடங்களில் அவர்களின் செயல்பாடுகள் ஏன் ஏற்றுக்கொள்ளப்படுபவையாக இருப்பதில்லை என்பதுபற்றியும் சரியான விளக்கங்கள் இந்நாடகத்தின்மூலம் தெரியப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியை மக்கள் தொலைக்காட்சி முழுவதுமாக பதிவு செய்தது. ஒருவாரம் கழித்து இந்நிகழ்வு இருமுறை ஒளிபரப்பப்பட்டது என்று அறிந்தேன். மக்கள் தொலைக்காட்சிக்கு எனது நன்றிகள். தினகரன், டைம்ஸ் ஆப் இண்டியா ஆகிய நாளிதழ்கள் படச்செய்தியாக இந்நிகழ்வை வெளியிட்டன. நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் இதழ் புகைப்படங்களுடன் சிறப்புக்கட்டுரை வெளியிட்டிருந்தது. கடற்கரையில் நடந்த திருநங்கைகளின் இந்த எளிய நிகழ்வு ஒரு முக்கியப்பதிவாகும்.
இதோ சில புகைப்படங்கள் :
From Transwomen, the respectables - Hunt for Dignity |
From Transwomen, the respectables - Hunt for Dignity |
From Transwomen, the respectables - Hunt for Dignity |
From Transwomen, the respectables - Hunt for Dignity |
From Transwomen, the respectables - Hunt for Dignity |
From Transwomen, the respectables - Hunt for Dignity |
From Transwomen, the respectables - Hunt for Dignity |
From Transwomen, the respectables - Hunt for Dignity |
From Transwomen, the respectables - Hunt for Dignity |
From Transwomen, the respectables - Hunt for Dignity |
From Transwomen, the respectables - Hunt for Dignity |
From Transwomen, the respectables - Hunt for Dignity |
From Transwomen, the respectables - Hunt for Dignity |
From Transwomen, the respectables - Hunt for Dignity |
From Transwomen, the respectables - Hunt for Dignity |
From Transwomen, the respectables - Hunt for Dignity |
From Transwomen, the respectables - Hunt for Dignity |
From Transwomen, the respectables - Hunt for Dignity |
From Transwomen, the respectables - Hunt for Dignity |
From Transwomen, the respectables - Hunt for Dignity |
From Transwomen, the respectables - Hunt for Dignity |
From Transwomen, the respectables - Hunt for Dignity |
From Transwomen, the respectables - Hunt for Dignity |
From Transwomen, the respectables - Hunt for Dignity |
From Transwomen, the respectables - Hunt for Dignity |
From Transwomen, the respectables - Hunt for Dignity |
From Transwomen, the respectables - Hunt for Dignity |
From Transwomen, the respectables - Hunt for Dignity |
மேலும் புகைப்படங்கள் இங்கே>>>
Transwomen, the respectables - Hunt for Dignity |
Friday, April 17, 2009
சகோதரியின் ஞாயிறு நிகழ்வில் பங்கேற்பீர்!
அன்புள்ள நண்பரே,
சகோதரியின் ஞாயிறு நிகழ்வில் பங்கேற்பீர்!
சகோதரியின் ஞாயிறு நிகழ்வில் பங்கேற்பீர்!
--------------------------------------------------------------
திருநங்கைகள்
மதிப்பிற்குரியவர்கள்
--------------------------------------------------------------
திருநங்கைகள் குறித்த ஒரு பொது நிகழ்வு
நாள் : ஏப்ரல் 19, ஞாயிறு மாலை 5 மணிக்கு மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகில்
நிகழ்ச்சி நிரல்
அடையாளம்
திருநங்கைகள் வாழ்க்கை குறித்த ஒரு வீதி நாடகம்
வலி
கவிதைகள் வாசிப்பு
மற்றும்
திருநங்கைகளின் வாழ்வாதார உரிமைகளை ஆதரிக்கும பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் .
மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் திருநங்கைகள் பங்கேற்கவுள்ளனர். அனைவரும் வாரீர்!
நிகழ்ச்சி ஏற்பாடு: சகோதரி
******************************************************************************
திருநங்கைகள்
மதிப்பிற்குரியவர்கள்
------------------------------
திருநங்கைகள் குறித்த ஒரு பொது நிகழ்வு
நாள் : ஏப்ரல் 19, ஞாயிறு மாலை 5 மணிக்கு மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகில்
நிகழ்ச்சி நிரல்
அடையாளம்
திருநங்கைகள் வாழ்க்கை குறித்த ஒரு வீதி நாடகம்
வலி
கவிதைகள் வாசிப்பு
மற்றும்
திருநங்கைகளின் வாழ்வாதார உரிமைகளை ஆதரிக்கும பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் .
மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் திருநங்கைகள் பங்கேற்கவுள்ளனர். அனைவரும் வாரீர்!
நிகழ்ச்சி ஏற்பாடு: சகோதரி
******************************
Friday, April 10, 2009
பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு விளக்கம் ..
- திருநங்கைகள் யாரையும் கட்டாயப்படுத்தி பெண்ணாக மாற்றுவதில்லை. தான் பெண்ணாக மாறி வாழ வேண்டும் என்று விரும்பி வரும் அரவானிகளைத்தான் பல சோதனைகளுக்குப்பின் அரவானி குடும்பததில் சேர்த்துக்கொள்வார்கள். தொடர்ந்து அந்த நபர் நிர்வாணம் என்றழைக்கப்படும் ஆணுறுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்று விரும்பி தொந்தரவு செய்தால்தான் பால் மாற்று அறுவை சிகிச்சைக்கு சம்மதிப்பார்கள். அரவானியாக அறியப்பட்டவர்களை கட்டாயப்படுத்தி யாரும் அறுவை சிகிசசை செய்வதில்லை.
- பெண்தன்மை கொண்ட ஆண்குழந்தைகளை நம் குடும்ப கட்டமைப்புகள் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதால், இந்த சமூகம் அத்தகைய குழ்ந்தைகளை கேலி கிண்டல் செய்து துன்புறுத்துவதால் அத்தகைய குழ்ந்தைகள் மனதளவில் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு முறையான கவுன்சலிங் தருவதற்கான ஏற்பாடுகள் இங்கு இல்லை. அத்தகைய குழ்ந்தைகள் வீட்டை விட்டு பெரும்பாலும் வெளியேறிவிடுகின்றனர். இதனால்தான் அவர்கள் பாதை மாறும் சூழ்நிலை ஏற்படுகின்றது. பெற்றவர்கள் தங்கள் குழ்ந்தைகளை வீட்டைவிட்டு விரட்டாமல் அவர்களை புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டால் இக்குழந்தைகள் வாழ்க்கை சீரழியாது. அரவானிகள் பெரும்பாலானவர்கள் அப்படி வீட்டை விட்டு துரத்தப்பட்டவர்கள் அல்லது தாமே வெளியேறியவர்கள்தான்.
- பொதுவாக திருநங்கைகள் பொதுவெளி சமூகத்தின் ஒரு அங்கமாக வாழ விரும்புகின்றனர். ஆண்களில், பெண்களில் தவறு செய்பவர்களைப்போல திருநங்கைகளில் யாரேனும் ஒருவர் தவறுசெய்ததாக அறியப்பட்டால் அதற்காக ஒட்டுமொத்த திருநங்கைகளையும் பழிப்பது சரியாகாது. திருநங்கைகள் சமூகத்திலும் அதிகாரம், பணபலம் உள்ள மிகச்சிலரால் பல திருநங்கைகள் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பை சட்டம்தான் வழ்ங்கவேண்டும்.
- பொதுவாக திருநங்கைகள் ஏதாவது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டால் அவர்களை பெண்களுக்கான சிறையில்தான் அடைக்கவேண்டும். ஆண்களுக்கான சிறையில் அடைக்கும்போது அவர்கள் பாலியல் வன்முறைக்கு மட்டுமின்றி, பாதுகாப்பின்மைக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். இதை கவனத்தில்கொள்ளவேண்டும். கைது செய்யப்பட்டால் திருநங்கைகளை பெண்களுக்கான சிறையில்தான் அடைக்கவேண்டும்.
- திருநங்கைகளின் வாழ்வாதார பிரச்னைகளை உங்கள் கட்டுரைகளின் மூலமாகவும், செய்திகள் மூலமாகவும் வெளியிட்டு மக்கள் மத்தியில் மிகப்பெரிய புரிதலையும், ஏற்றுக்கொள்ளலையும் ஏற்படுத்தி இருக்கிறீர்கள். பல்வேறு காலகட்டங்களில் எங்கள் போராட்டங்களுக்கும் துணையாய் இருந்திருக்கிறீர்கள். உதாரணமாக, ஈழத்தமிழர்களுக்கான எங்கள் உண்ணாநிலை நோன்பின்போது மிகப்பெரிய ஆதரவை தந்து செய்தி வெளியிட்டிருக்கிறீர்கள். அதற்கு எங்களுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
- தற்போது திருநங்கைகள் பற்றி ஒரு சம்பவத்தின் அடிப்படையில் செய்திகள் வந்துகொண்டிருப்பதால் பொதுமக்கள் திருநங்கைகள் அனைவரையும் தவறாக புரிந்துகொள்ள வாய்ப்புண்டு. சமூகத்தில் தங்களது அடிப்படைத்தேவைகளுக்கே போராடிக்கொண்டிருக்கிற திருநங்கைகளுக்கு சமூக அங்கீகாரம் தேவை என்பதை நீங்கள் அறிவீர்கள். மேலும் திருநங்கைகளுடைய உரிமைப்போராட்டத்தில் இதுபோன்ற ஊடகச்செய்திகள் சோர்வடையச்செய்கின்றன. இதை கருத்தில்கொண்டு செய்திகள் வெளியிடுமாறு பத்திரிக்கை நண்பர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Subscribe to:
Posts (Atom)
-
விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள திருநங்கைகளின் வாழ்வியலை ரௌத்திரமாகச்சொல்லும் எனது கவிதை நூலான 'குறி அறுத்தேன்' கவிதை நூலிலிருந்த...
-
தமிழ் திரைப்பட இயக்குநர்களுக்கு கல்கியின் கோரிக்கை என்னவென்றால்....