Tuesday, September 02, 2014

கல்கி அக்காவும் நானும் - எஸ்தர் சபியின் வலைப்பூ பேட்டி

 கல்கி அக்காவும் நானும்


நர்த்தகி திரைப் படம் மூலமாக கதாநாயகியாக திரையுலகில் கால் பதித்தவர் நடிகை கல்கி. அது மட்டுமல்லாது அவர் ஓர் திருநங்கைகள் சமூக நல பணியாளர். ஒரு வழியாக அவரிடம் தொலைபேசியில் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. இந்த பத்து கேள்விகளும் கேட்டு முடிக்க அப்பப்பா இரண்டு நாட்களாகி விட்டன தெரியுமா? முதலில் சுக நலன்களை விசாரித்து விட்டு அப்புறமா செவ்விக்கு சென்றோம்.

01- உங்கள் சகோதரி அமைப்பு ஏன் எதற்காக?

ஆதரவற்ற, உதவி இழந்த, குடும்பத்தினரால் கைவிடப்பட்ட, பாடசாசைகளிலும், அலுவலகங்களிலும் புறக்கணிக்கப்படும் திருநங்கைகளை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் முன்னேற்றுவதற்காக..

02- நர்த்தகி பட வாய்ப்பு பற்றி கூறுங்கள்.

என் வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. என்னை ஓர் மிக சிறந்த நடிகையாக உலகிற்கு வெளிபடுத்த இயக்குனர் விஜயபத்மா மூலமாக கிடைக்கப்பெற்ற ஓர் வாய்ப்பு. இது கடவுள் தந்த வரம் என்றே கூறமுடியும்.

03- ஓர் நடிகையாக கல்கி எப்படி?

ஓர் சவாலான கதாபாத்திரம், நடிப்பு திறனை வெளி கொணர கூடிய பாத்திரம், கல்கி எவ்வளவு நேரம் திரையில் தோன்றுவேன் என்பது முக்கியமல்ல 05 நிமிடங்கள் என்றாலும் மக்கள் மனதில் இடம் பிடிக்க கூடிய கதாபாத்திரமாக அமைந்தால் நல்லது. நான் கடவுள் படத்தில் பூஜாவின் பாத்திரம் போல் இருந்தால் எனக்கு பிடிக்கும்.

04- இப்போது நடிக்கும் திரைப் படங்கள் என்ன?

ஓர் மலையாள படத்தில் கதா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாளியுள்ளேன். கதையில் மாற்றம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு சற்று தாமதமாகியுள்ளது.பிரெஞ்சு மொழி பட வாய்ப்பு ஒன்று வந்தது.ஆனால் மறுத்துவிட்டேன் காரணம் இந்தியாவை விட்டு 01 வருடகாலம் பிரான்ஸில் தங்கியிருந்து படத்தை முடித்து கொடுக்க வேண்டிய சூழல்..

05- உலகம் திருநங்கைகளை திருநங்கை எனும் போர்வைக்குள் தள்ளிவிட்டது. ஆனால் திருநங்கைகள் யாரும் திருநங்கையாக இருக்க ஆசைப்படவில்லை ஒரு பெண்ணாக வாழவே ஆசைப்படுகிறார்கள்.  அவர்கள் பெண் உலகை சார்ந்தவர்கள். இது பற்றி உஙகள் கருத்து.

கலாசாரம், குடும்பம், என்று திருநங்கைகள் கட்டுப்படுத்தப்பட்டு கைவிலங்கிடப்பட்டிருக்கிறார்கள். பெண்களும் அவ்வாறே இதனால் அவர்கள் திறமைகள் முயர்ச்சிகள் எல்லாம் கிழ் விழுந்து போகும் நிலை கண் கூடு. உலகம் திருநங்கைகளை திருநங்கை எனும் போர்வைக்குள் வைத்திருப்பது ஆணாதிக்க சமூகத்தில் பெண்களின் நிலை என்ன என்பதை காட்டுகிறது.

06- ஏதாவது தொலைக் காட்சி தொடர்கள் மூலமாக திருநங்கைகள் பிரச்சினைகளை சொல்ல முயர்ச்சிக்கலாமே?..

முயர்ச்சிக்கலாம் ஆனால் நிறுவனங்கள் தயாரிக்க முன்வருவது மிக கடினம்.

07- தமிழ் நாட்டு திருநங்கைகளிடத்து பொதுவாக படித்த திருநங்கைகளிடத்து பல விடயங்களிலில் ஒன்றுக் கொன்று முரண் பட்ட கருந்துக்கள் நிலவுகின்றன. இந்நிலை ஏன?

ஈகோ நான் பெரிசா நீ பெரிசா என்கிற பொறாமைதான்.

08- உங்களுக்கு இலங்கை திருநங்கைகளை பிடிக்குமா?

இலங்கை திருநங்கைகள் மட்டுமல்ல எல்லா தமிழ் திருநங்கைகளையும் பிடிக்கும் தமிழ் திருநங்கைகள் என்பதை விட திருநங்கைகள் எல்லாரையும் பிடிக்கும் பொதுவாக தமிழ் திருநங்கைகளை அதிகம் பிடிக்கும்...

09- உங்கள் வருங்கால கணவர் குறித்து கூறுங்களேன்,

என் கணவன் காதலன் எல்லாம் என் மடிகணினிதான் (லாப் டாப்). என்னோடு எந்நேரமும் இருந்து எனக்காக உழைக்கும் என் கணினிதான் என் கணவன் காதலன் எல்லாம். நான் பெரிய மனுஷியாக உருவானதற்கு என் லாப் டாப்பும் ஒரு காரணம் அதனால் என் கணவன் என் லாப் டாப்தான்.

அவருக்கு கொஞ்ஞம் உடம்பு சரியில்ல டாக்டர் வந்து கொண்டு போய்ட்டார். எப்பிடியும் இன்னைக்கு வந்திடுவார். (புரியலயா அதானப்பா லாப் டாப் பழுதாகிட்டுதாம் திருத்திறத்துக்கு கொண்டு போய்ட்டாங்களாம்.plz pray 4 him )

10- உங்களுக்கு எஸ்தர் சபியை பிடிக்குமா?

(ஒர் புன்சிரிப்புடன்) எஸ்தரை எனக்குப் பிடிக்கும் இலங்கையில் இருந்து கொண்டு திருநங்கைகள் விடயத்தில் கவனப்படுபவள். எஸ்தரை இது வரைக்கும் பார்த்தது கிடையாது ஆனாலும் எஸ்தரை பிடிக்கும். அவளின் முற்போக்குதனமான எழுத்தும் பிடிக்கும்.


அப்பப்பா ஒரு வழியா முடிச்சாச்சு. நன்றி கல்கி அக்கா என்னை பிடிக்கும் என்று கூறியதற்காக.