சென்னை எர்ணாவூரில் உள்ள வர்மா நகரில் கோடைக்கால வகுப்புகளில் குழந்தைகளுக்கு ஓவியக்கலையும், படைப்பாற்றல் பயிற்சிக்கலையும் கற்றுக்கொடுக்கிறார் திருநங்கை வினிதா. கல்கத்தாவில் பிறந்து திருநங்கை என்பதால் குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டு சென்னை வந்த வினிதா தமிழ் கற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் திருநங்கைகள் குடியிருக்கும் சுனாமி குடியிருப்பு பகுதியில் மற்ற திருநங்கைகளுடன் வசித்து வருகிறார்.
திருநங்கைகளுக்காக சமூக மேம்பாட்டு தொண்டு நிறுவனமான 'சகோதரி' அமைப்பின் மூலமாக ஓவியப்பயிற்சி கற்றுக்கொண்ட வினிதா சென்னையில் அவர் வாழும் எர்ணாவூர் பகுதியில் உள்ள வர்மா நகரில் கோடைக்கால வகுப்புகளில் குழந்தைகளுக்கு ஓவியங்களையும், படைப்பாற்றல் பயிற்சிக்கலையும் கற்றுக்கொடுக்கிறார்.
இதுபற்றி அவர் கூறுகையில் "ஓவியப்பயிற்சியின் போதே எனக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. தினமும் வரையத்தொடங்கினேன். நண்பனின்மூலமாக குழந்தைகளுக்கு கற்பிக்கும் வாய்ப்பு வந்ததும் அகமகிழ்ந்த்தேன். குழந்தைகள் என்னிடம் விரும்பிக்கற்றுக்கொள்கின்றனர். முதலில் இரண்டுபேர் மட்டுமே வந்தனர். இப்போது 40 பேர் வருகின்றனர்.ஒவ்வொரு வகுப்பிற்கும் இப்பயிற்சியை நடத்தும் நிறுவனத்தினர் 500 ரூபாய் கட்டணமாக தருகின்றனர். மரியாதையும் கிடைக்கிறது, மகிழ்ச்சியும் கிடைக்கிறது" என்கிறார்.
தனக்கு தொடர்ந்து கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளதாகவும், அதன்மூலம் வாய்ப்புகள் வந்தால் தனது பொருளாதாரநிலை என்றும் கூறினார் வினிதா. பெங்காலி, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் பேசுகிறார் வினிதா.
கல்வி என்ற ஒன்றே திருநங்கைகளுக்கு மிகப்பெரிய வழிகாட்டியும், வாழ்க்கை துணையுமாகும்.
நீங்கள் திருநங்கைகளுக்கு என்றும் ஆதரவாக இருப்பீர்களா? சகோதரி தொண்டு நிறுவனத்தில் தன்னார்வ தொண்டராக இணை ந்துகொள்ளுங்கள். www.sahodari.org மற்றும் முகநூல் இணைய முகவரி www.facebook.com/sahodari.
YouTube Channel subscribe செய்ய : www.tinyurl.com/KalkiVideos
இதுபற்றி அவர் கூறுகையில் "ஓவியப்பயிற்சியின் போதே எனக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. தினமும் வரையத்தொடங்கினேன். நண்பனின்மூலமாக குழந்தைகளுக்கு கற்பிக்கும் வாய்ப்பு வந்ததும் அகமகிழ்ந்த்தேன். குழந்தைகள் என்னிடம் விரும்பிக்கற்றுக்கொள்கின்றனர். முதலில் இரண்டுபேர் மட்டுமே வந்தனர். இப்போது 40 பேர் வருகின்றனர்.ஒவ்வொரு வகுப்பிற்கும் இப்பயிற்சியை நடத்தும் நிறுவனத்தினர் 500 ரூபாய் கட்டணமாக தருகின்றனர். மரியாதையும் கிடைக்கிறது, மகிழ்ச்சியும் கிடைக்கிறது" என்கிறார்.
தனக்கு தொடர்ந்து கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளதாகவும், அதன்மூலம் வாய்ப்புகள் வந்தால் தனது பொருளாதாரநிலை என்றும் கூறினார் வினிதா. பெங்காலி, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் பேசுகிறார் வினிதா.
கல்வி என்ற ஒன்றே திருநங்கைகளுக்கு மிகப்பெரிய வழிகாட்டியும், வாழ்க்கை துணையுமாகும்.
நீங்கள் திருநங்கைகளுக்கு என்றும் ஆதரவாக இருப்பீர்களா? சகோதரி தொண்டு நிறுவனத்தில் தன்னார்வ தொண்டராக இணை ந்துகொள்ளுங்கள். www.sahodari.org மற்றும் முகநூல் இணைய முகவரி www.facebook.com/sahodari.
YouTube Channel subscribe செய்ய : www.tinyurl.com/KalkiVideos